Wednesday, August 6, 2008

கடவுள் உண்டா இல்லையா? - 2

எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் கடவுள் மேல் கோவம் வரும் ஆனால் கடவுள் இல்லையென்று எண்ணியதில்லை. சிறுவர் மலருக்கு அப்புறம் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என்று சிதிரகதைகளை தேடி தேடி படித்தேன். இதில் ராணி காமிக்ஸில் வரும் ஜேம்ஸ் பாண்டு கதைகள் ரொம்ப பிடிக்கும். காரணம், அதில் வரும் பெண்கள் அரை குறை ஆடைகளில் அலம்புவார்கள். பிறகு ராஜேஷ்குமார்,பட்டுகோட்டை பிரபாகர் என்று படித்து, கடைசியில் எல்லோரும் போர் அடித்தார்கள். வயது பதினான்கில் பேப்பர் படிக்க செல்லும்போது அங்கு வரும் நபர்கள் அன்றைய அரசியல் பற்றி விவாதிப்பார்கள். கலர் கலரான வெள்ளி மலர் கிடைக்கும் வரை அவர்கள் பேட்சை கேட்க ஆரம்பித்தோம் நானும் எனது நண்பர்களும். நாங்கள் எல்லா மன்றங்களுக்கும் செல்வதால் என்னையறியாமலேயே அவர்களை எடை போட ஆரம்பித்தது. காங்கிரஸ் காரர்கள் காந்தியை பற்றியும் ஜனதா கட்சியை பற்றியும் பேசுவார்கள். பாதி புரியும் பாதி புரியாது. திமுக காரர்கள் திராவிட இயக்க வரலாற்றை அவ்வப்போது நினைவு கூறும்போது மிக பிரமிப்பாக இருக்கும். அதிமுக நபர்கள் அன்றைய நிகழ்வுகளை பற்றி பேசுவார்கள்.எனக்கொன்றும் கிடைக்கவில்லை. கம்யூனிஸ்ட் காரன் பேசுவது ரஸ்யா மற்றும் சீனா பற்றியே இருக்கும். சிலநேரங்களில் ஊர் பிரச்சனைகளை பற்றி பேசும்போது புரியும் புடிக்கும். நாளாக நாளாக திராவிடர் கழக புத்தகங்கள் என்னை எனக்குள்ளே கேள்வி கேட்க தூண்டியது. என் பெற்றோரிடம் கேட்டால் ஒழுங்கான பதில் இல்லை. அதன் பிறகு கம்யூனிஸ புத்தகங்கள் என் அண்ணன் மூலம் கிடைத்தது. கெட்டவனான அண்ணன் நல்லவனாக தெரிய ஆரம்பித்தான்.
இவ்வுலகம் கருது முதல்வாதம் மற்றும் பொருள் முதல்வாதம் என்ற இரண்டு தத்துவங்களில் பிரிந்து இருப்பதை உணர்ந்தேன். சிறுவயதில் பூசாரி குளிக்க ஓடியதும் மற்றும் சில நிகழ்வுகளும் என்னை இந்து மதத்தில் இருந்து ஓட வைத்தது. பொருள் முதல்வாதம் என்னை ஈர்த்தது. பதினான்கு வரை வீட்டில் பதிபக்தியாக இருந்த நான் பதினாறு வயதில் நாத்திகனாக உருவானேன். வீட்டில் எனது அண்ணன் போல நானும் மாறியது என் அம்மாவுக்கு மிக வருத்தம். நாளடைவில் பெரியார் பற்றியும் கம்யூனிஸம பற்றியும் பார்பனீயம் பற்றியும் சொல்ல ஆரம்பித்தேன். அப்போதைக்கு ஆமாம் சொல்லும் அம்மா அடுத்த நிமிடம் முருகா, வடிவேலா... என ஆரம்பித்து விடும். இன்று இந்து மதம் ராமர் கோயில், ராமர் பாலம் என்றும் நாட்டில் ரத்தம் பார்க்கும் நேரத்தில், என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ராமரைபற்றியோ, சீதை பற்றியோ சொன்னதில்லை. அம்மாவிடம் நான் கண்ட தெய்வங்கள் அய்யனார், முனியாண்டி, மாரியாத்தா, சோனைசாமி, மதுரை வீரன், பாண்டி கோவில், அழகர் கோவில். இவர்கள் இந்துக்களே அல்ல. நானும் இந்துவல்ல என்று உணர ஆரம்பித்தேன். அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் மற்றும் பலர் என்னை கருத்துமுதல்வாத நிலையை விட்டு பொருள் முதல்வாத நிலைதான் சரியான பதை என்று தெளிவு படுத்தினார்கள்.கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை.
காரணம்:கடவுள் கண்முன் தோன்றவும் இல்லை.என்னால் உணரவும் முடியவில்லை.உணர்ந்தவர்கள் என்னை உணரவைக்க முடியுமா?
அல்லா உண்மையெனில் பாபர் மசூதி எப்படி இடிந்திருக்கும். கர்த்தர் உண்மையெனில் ஒரிசாவில் பாதிரியார் எப்படி உயிரோடு எரிக்கப்பட்டு இருப்பார்.


இவர்களை விடுங்கள் தனிதனி துறை வைத்திருக்கும் இந்துமத கடவுள்கள் தமிழக கரையோரம் சுனாமி வரும்போது எங்கே போனார்கள்.முருகன் வள்ளியிடம் பள்ளி கொண்டிருதாரா?சிவன் பாற்கடலில் பார்வதியுடன் பஸ்கி எடுத்து கொண்டிருந்தாரா?விஷ்ணு யாரும் இல்லையென்று பாம்பின் மேல் துயில் கொண்டிருந்தாரா?வீறு கொண்டு எழும் நாக் அவுட் காளி ரம்மி விளையாடிக்கொண்டு இருந்ததா? பிள்ளையார் கம்மா கரையில் குளிக்கும் கமலாவின் முதுகை வெறித்து கொண்டிருந்ததா?என்ன செய்தார்கள், என்ன செய்கிறார்கள்?அவர்கள் என்ன செய்ய முடியும்.அறுபடை முருகனின் கோயிலில் அருவதேட்டு பூட்டு தொங்குது. அவர்களுக்கே காவல் தேவை படுத்து.அவர்கள் வந்து நம்மள காத்து ...என்ன கொடுமை சார் இது.
இந்து கடுவுள்கள் செய்தேதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.அவாள்களுக்கும், ப்ரேமானாந்தா போன்ற போலி சாமியார்களுக்கும்நிறையவே சோறு போடுறார்.

முடிவாக, கடவுள் இருக்காரோ இல்லோயோ...தயவு செய்து மதவெறிக்கோ, சாமியார் (சாமியார் என்றாலே போலிதான், எனவே போலி சாமியார் ஒன்று இல்லை) வேட்கைக்கோ ஆட்படவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

வாழ்க மனித நேயம்.
வளர்க பகுத்தறிவு.

Tuesday, August 5, 2008

கடவுள் உண்டா இல்லையா?

எல்லோரையும் போலவே எனக்கும் இந்த ஐயம் எனது பால்ய வயதில் எழுந்தது. என்னை சிந்திக்க தூண்டிய முதல் கேள்வி இது. எனவே தான் இந்த தலைப்பை எனது முதல் தலைப்பாக கொண்டுள்ளேன். அதற்கு முன்பு வரை நான் எல்லோருக்கும் ஆமாம் சாமி தான். பத்தாம் வகுப்பு படிக்கும் வரை நான் வெள்ளி செவ்வாய் கோயிலுக்கு செல்லாவிட்டாலும், வீட்டில் அம்மா சார்பில் விளக்கேற்றி சாமி கும்பிடும் ஒழுக்கமான பையன். மதுரை தத்தநேரியில் வைகை கரையோரம் அமைந்துள்ளது எங்கள் வீடு. நான் வளரும்போது இந்து மதத்தை சார்ந்தவன் என்றும் எனது ஜாதி பள்ளன் என்றும் வளர்க்கப்பட்டேன். மார்கழி மாதம் எங்கள் தெரு சிறுவர்கள் எல்லோரும் காலையில் எழுந்து அருகில் உள்ள கோயிலுக்கு செல்வது வழக்கம். அங்குள்ள அனுமார் கோயிலின் பூசாரி முறை திடீரென்று பதறினார். ஓடி சென்று ஒரு குடத்தில் தயாராக இருந்த தண்ணீரை தனது மேல் ஊற்றி கொண்டார்.
பக்கத்தில் இருந்த முதியவர் ஒருவர் என்னை திட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் இருந்த நண்பன், உன் கை அவர் மேல் பட்டு விட்டது, அதனால் தான் அவர் குளிக்கிறார் என்றான். ஏன் என்று அவனிடம் கேட்டேன். தெரியாது என்றான். எனது பெற்றோரிடமும் அண்ணனிடமும் நடந்த விடயத்தை சொன்னேன். எங்க அண்ணன் சாமி கும்பிட மாட்டான். எனவே அவன் எங்களுக்கு கெட்டவனாகவே பட்டான். பிறகு நாம் தாழ்ந்த சாதி அவர்கள் உயர்ந்த சாதி (அல்ல, இது உயர்ந்த சதி) என்று விளக்கம் கொடுத்தார்கள். எனக்கு கோவம் வரவில்லை. மறுநாள் முதல் நாங்கள் வேண்டுமேன்றே பூசாரியை தொட ஆரம்பித்தோம். அவர் ஓட்டத்தையும் குளிப்பதும் எங்களுக்கு தினசரி வேடிக்கையாக பட்டது. அந்த பூசாரி கோனார் சாதி பெரியோரிடம் முறையிட்டு அவர் எங்களை அதட்டினார். நாங்கள் விடுவதாயில்லை.

காலையில் எழுந்து தினசரி படிப்பது எனக்கு வழக்கம். படிக்கும் பழக்கத்தை உருவாகியது அரசியல் கட்சி மன்றங்களே. காங்கிரஸ் மன்றத்தில் தினமலர் பேப்பருடன் வரும் சிறுவர் மலர், தினமணியுடன் வரும் தினமணிகதிரின் தும்பி கதை, தினகரனில் சினிமா படங்கள் கம்யுனிஸ்ட் மன்றத்தில் சீனா எனும் அங்கில புத்தகத்தில் வெள்ளைக்கார கறிகளின் படங்கள். வெள்ளிமலருக்கு கடும் போட்டியே நடக்கும். இந்த பேப்பரில் படம் பார்க்கும் வழக்கமே நாளடைவில் வாசிக்கும் பழக்கத்தை தூண்டியது. இதற்க்காக அதிமுக தவிர அணைத்து கட்சி மன்றங்களுக்கும் எனது நன்றிகள். ஏனெனில் அதிமுக மன்றத்தில் பேப்பர் ஒழுங்காக வருவதில்லை. யாரும் பொறுப்பேற்கவும் இல்லை.

தொடர்வேன்.....