Sunday, August 15, 2010

குரோம்பேட்டை போட்டோநோவா 1

நான் எம் ஐ டி யில் பொறியியல் உயர்படிப்பு படித்துகொண்டிருந்த போது எனக்கு 25 வயது. பதின் வயதுகளில் பெண்களிடம் பேசுவதற்கு எனக்கும் எங்கள் நண்பர்களுக்கும் வாய்ப்பமையவில்லை. அப்படியே வைப்புகிடைதாலும் நண்பர்கள் அதை தொடர விடுவதில்லை. எல்லோரும் மௌனம் பேசியதே சூர்யா கெட்டப்ல திரிஞ்ச பயல்க. எங்களின் இருபதின் வயதுகளில் எல்லோரும் தனித்தனியாக வாய்ப்பை உருவாக்க தொடங்கினோம். இணைய தொடர்புக்கும், துறை சம்பந்தமான பக்கங்களை பிரதி எடுக்கவும் போட்டோ நோவா எனும் இணைய மையத்திற்கு செல்வதுண்டு. படிப்பிற்கான செலவுகளை நண்பர்களிடம் பெற்று வந்ததால் நம்மிடம் பணம் எப்போதும் இருப்பதில்லை. அந்த இணைய மையத்தில் தேன் மற்றும் கிளினி என்ற இரு பெண்கள் இருப்பதுண்டு. சில நாட்களில் இருவரும் எனக்கு அறிமுகமானார்கள். நாளடைவில் அம்மையத்தில் நானும் எனது நண்பர்கள் சக்தி மற்றும் ராஜேஷ் ஆகியோரும் அங்கே செல்வதுண்டு. அவர்கள் எங்களிடம் பணம் வாங்குவதில்லை. இரு பெண்ணுக்கும் அனைவரும் தன்னிடம் மட்டுமே பேசவேண்டும் என்ற பெண்களுக்கே உரிய எண்ணம் இருந்தது. ஒருவரிடம் தனியாக பேசினால் அது என்ன, எதைப்பற்றி என்பதை உடனே தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு தலையே வெடித்துவிடும். படிப்பு முடிந்து நான் எனது நண்பன் சம்பத் மற்றும் அமெரிக்க சென்று வந்த மணிவண்ணனும் ஒரு வீடு எடுத்து தங்கினோம். நான் தேனை இருவருக்கும் அறிமுகம் செய்துவைத்தேன். நம்ம நண்பர் மணிவண்ணன் யு எஸ் ரிடர்ன் என்பதால் அவரிடம் ஒரு கைபேசியும் சில இளவல்களும் கூடவே இருப்பதுண்டு. இங்கு மணிவண்ணனை பற்றி ஒருவிஷயம் சொல்லவேண்டும். வெள்ளிக்கிழமைகளில் நம்மை மலையேற்ற கூப்பிடுவார். "கையில் காசில்ல மணி என்பேன். " நான் கடன் தர்றேன் ஆனால் ஒரு கண்டிசன்?" என்பார். எப்படிஎன்றால் நமக்கு அவர் கடன் கொடுத்தால் அவருக்கு ஒரு பீர் வாங்கி தரவேண்டும். நம்மை கடனாளியும் ஆக்கி, அவரின் தாகத்தையும் தீர்த்து கொள்வார். எப்படி இருக்கிறது? ஏகாதிபத்தியம் அமெரிக்காவில் மட்டுமல்ல அமேரிக்கா சென்று வந்த மணிவண்ணனிடம் இருந்தது. இவர் இப்படியென்றால் சம்பத் கிரிக்கெட்டுக்கும் திரைப்பட காதலுக்கும் கொடிபிடிக்கும் தேசியவாதி. வாரம் முழுக்க எந்த ஒரு செய்தி தாலும் வாங்காதவன், வெள்ளிகிழமை மட்டும் தந்தி முதல் மலர் வரை அனைத்தும் வாங்கி வருவான். விடயம் வேறொன்றுமில்லை. அன்றுதான் வெள்ளி மலர், சினிமா மலர் என்ற சினிமா பகுதிகள் நடிகைகளின் பெரிய மார்புகளுடன் வெளிவரும். மணிவண்ணன் நல்லா நகைச்சுவையுணர்வு கொண்டவேறேன்றால் சம்பத் குழந்தை தனம் மிகுந்தவன். நாங்களும் அதற்கு காத்திருப்போம் என்பது வேறு விடயம். போட்டோ நோவா மையத்தில் காலை ஆறுமணிக்கே தேன் திறந்து விடுவதால், அப்பெண் மணிவண்ணன் கைபேசி மூலம் எங்கள் அனைவரிடமும் கதைபதுண்டு. அவள்தான் எங்களுக்கு அலாரம். நாளடைவில் தேனின் குரலை முதலில் கேட்க காலை ஐந்து மணிக்கே எழுந்து போட்டி போடுவதுண்டு. யாருக்கும் தெரியாமல் அதிகநேரம் பேச எல்லோருக்கும் மிகுந்த ஏக்கம். நான் என்ன பேசு வேநேன்றால் 'நீ அழகா இருக்கே, நீ என் கனவில் வந்தே, நம்ம ரெண்டு பெரும் டூயட் பாடினோம். இந்த கலர் சேலையில் தேவதை மாறி நீ வந்தே' என நீண்டு கொண்டே போகும். தேனும் சளைக்காமல் "அப்புறம்" என்பாள். என்னிடம் மட்டும் அல்ல எல்லோரிடமும் அப்படிதான். ஒரு நாள் நண்பனின் வீட்டில் மலையேறி விட்டு அதிகாலை ஆறு மணிக்கு முன்பே நோவா மையத்தில் தேனின் தரிசனத்திற்கு காத்திருந்தேன். சரியாக ஆறுமணிக்கு தரிசனம் தந்தாள். என்னை அமர வைத்துவிட்டு தன்னை பணிக்கு டபிள் மற்றும் கேபின்களை சரிபடுத்தி கொண்டும் கணினிகளை பூட் செய்துகொண்டுமிருந்தால். அவளிடம் என்ன கதை சொல்வது, எப்படி வசிய படுத்துவது என யோசித்துகொண்டிருந்தேன். ஏனென்றால் இத்தனிமை எப்போதாவதுதான் கிடைக்கும். அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ் என நினைத்து கொண்டிருந்த வேளையில் வாசலில் மணிவண்ணனின் நிழலாடியது. பாலச்சந்தர் படத்தின் கதாநாயகி பிலிம் ரோல் எரிந்தது போல் மனதில் நான் எரிந்து கொண்டிருந்தேன். அதேதான் மணிவண்ணனுக்கும் நடந்திருக்கும் என்பதால் இருவரும் புன்னகை கலந்த பார்வைகளை பரிமாறிக்கொண்டோம். ஆனால் தேனுக்கு இரட்டை மகிழ்ச்சி. மொக்கை போடா ரெண்டு வழிசல்கள் வந்துள்ளதே. அப்புறமென்ன மாத்தி மாத்தி கதைத்துக்கொண்டு சென்று விட்டோம். இதற்கிடையில் சம்பத் தினமும் மாலையில் அங்கு வர ஆரம்பித்தான். வரும்போது டைரி மில்க் சாக்லேட் அவளுக்கு வாங்கி வருவான். இதை எங்களுக்கு தெரியாமல் அவன் செய்தான். தேன் அதையும் என்னிடம் சொல்லிவிட்டாள். இந்த விளையாட்டை உறுதி படுத்த அவனை இரு சாக்லேட் வாங்கி வருமாறு அவளை சொல்ல வைத்தேன். அதுவும் நடந்தது. அந்த இரு சாக்லேட்களில் ஒன்று எனக்காக அவன் சென்ற பின் காத்திருக்கும். அப்பெண்ணுக்கு பிறந்தநாள் வந்தது. எனக்கும் நண்பன் சக்திக்கும் ஒரு கொள்கை உண்டு. எப்பெண்ணுக்கும் நமது கையில் இருந்து பைசா செலவு செய்யக்கூடாது. எனவே அவளிடம் உன் பிறந்த நாளுக்கு எங்களுக்கு பீர் வாங்கித்தர காசு தரவேண்டும் என்றோம். சரி என்றாள். உண்மையில் எங்களிடம் காசு இருக்காது. பிறந்தநாள் பரிசாக மணிவண்ணன் ஒரு சர்கஸ் பார் விளையாட்டு பொம்மை வாங்கி கொடுத்தார். நாங்கள் கேலி செய்வோம் என்று "அந்தப்பெண் நமக்கு நிறைய உதவி செய்துள்ளார் " என சமாளித்தார். உண்மையில் தென் எங்களுக்கு நிறைய உதவியிருக்கிறார். ஆனால் இவர் வாங்கி கொடுத்தது ஒரு வழிசலேஎன்பது என் எண்ணம். நண்பர் சம்பத் ஒரு படி மேலே பொய் ரோசாப்பூ போக்கே பரிசளித்தார். இங்குதான் எனக்கு சந்தேகம் வந்தது. அவனிடம் மொட்டை மாடிக்கு கூட்டி சென்று போட்டு வாங்கினேன். " நீ அவளுக்கு மட்டுமல்ல எனக்கும் ஒரு சாக்லேட் தினசரி வாங்கி வருகிறாய்" என்று போட்டு உடைத்தேன். ஆனால் அவள் தன்னை காதலிப்பதாக சொன்னான். எப்படி என்றேன். அவனது பதில் சிறுபிள்ளைதனமாக இருந்தது. "தினமும் நான் செல்லும் போது அங்குள்ள மியூசிக் சிஸ்டத்தில் காதல் பாடலாக போடுகிறாள்" என்றான். 'விழாமலே இருக்க முடியுமா விழுந்து விட்டேன் காதல் வலையிலே' போன்ற காதல் பாடல்கள். மற்ற பாடல்கள் எனக்கு நினைவில் இல்லை. அந்த நேரத்தில் நிறைய ஆண்கள் வருவதுண்டு. ஆனால் பாடல்களெல்லாம் தனக்காகவே என நம்பினான் அந்த வெகுளி நண்பன். இதை அப்பெண்ணிடமே சொல்லி இந்த போலி காதலுக்கு முற்று புள்ளி வைத்தேன். இதிலிருந்து சம்பத் என்னை எதிரியாக நினைக்க தொடங்கினான். அது பின்னாளில் எனக்கு தெரிய வந்தது. இதற்கிடையில் எங்களின் கல்லூரி இளவல் கிச்சா என்னும் கிருஷ்ண மூர்த்தியை தேனுக்கு அறிமுகபடுத்தி வைத்தோம். கிச்சா இந்த விடயத்தில் கில்லாடியாக இருந்தான். அவனிடமும் கைபேசி இருந்ததால் தேன் தனது தடவிய வார்த்தைகளை கொண்டு தேனை ருசிக்க ஆரம்பித்தான். மீதியை அப்புறம் பாக்கலாங்க.